தமிழக நேதாஜி ‘மாவீரன்’ SR.தமிழன் M.A., LLB., -ஒரு சகாப்தம்..
தேனி மாவட்ட மயிலாடும்பாறை அருகில் உள்ள கோரையூத்து என்ற கிராமத்தில் திரு.செவ்வாலைராஜா அவர்களின் மூத்த மகனாக பிறந்த தமிழன் சிறுவயது முதலே தனது கிராம விளையாட்டு குழுக்களுக்கும் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கும் தலைவனாக செயல்பட்டவர்.
சிறுவயது முதலே சமுதாயம் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக விளங்கினார். M.A படிப்பினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முடித்தவர் பின்பு தனது சட்ட படிப்பினை பெங்களூரில் தொடங்கினார்.
இதற்கிடையே தனது சமுதாய, சமூகப் பணிகளை தொடங்கும் பொருட்டு, தேனி மாவட்ட பிரமலைக் கள்ளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அச்சங்க செயல்பாடுகளில் திறன்பட செயலாற்றி, அச்சங்க உறுப்பினர்களிடமும் நன்மதிப்பினை பெற்று சங்கத்தின் பல்வேறு நிர்வாக பொறுப்புகளை வகித்தார்.
தேனி மாவட்ட பிரமலை கள்ளர் சங்கத்தினை தேனி மாவட்டம் முழுவதும் பரவியிருக்கின்ற கள்ளர் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து சங்கத்தினை வளர்ச்சி பாதைக்கு இட்டுசென்றார். இது இவரின் அரசியல் பணிக்கு அடித்தளம் இட்டது. இதை தொடர்ந்து, 2006 ல் BT அரசகுமாரின் திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத்தில் இணைந்த SR. தமிழன், அக்கட்சியின் தேனி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்பு, 2009 ல் தனது கட்சியினை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சியில், தமிழ் மாநில பொதுசெயலர் திரு. PV. கதிரவன் முன்னிலையில் ஃபார்வர்டு ப்ளாக் கட்சியில் இணைந்து தனக்கே உரித்தான பானியில் திறன்பட செயல்பட்டு ஃபார்வர்டு ப்ளாக்கினை தேனி மாவட்டம் முழுவதும் பரவச் செய்தார்.
2010 ல் இவரின் அதிதீவிரசெயல்படுகளை பார்த்த மாநில தலைமை, தேனி மாவட்ட பொது செயலராக நியமித்தது. இதனை தொடந்து இவரின் செயல்பாடுகளினால் தேனி மாவட்டத்தில் கிட்ட தட்ட எல்லா கிராமம் மற்றும் நகரங்களில் புலிக் கொடி பட்டொளி வீசி பறக்க தொடங்கியது.
2011-ல் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாக்கின் மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்தினர். இந்த மாநாட்டு நிகழ்வுக்கு பின்பு, தேனி மாவட்ட தேவரின மக்களின் கவனம் இவர் மேல் முழுவதும் திரும்பியது. தொடர்ந்து, இவர் தனது துடிப்பான. கட்சி பணிகளால், மாநில இளைஞரணி செயலராக 2012 ல் நியமிக்கப்பட்டார். பின்பு 2013 சென்னையில் நடைபெற்ற அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாக்கின் அகில இந்திய மாநாட்டில், மத்திய குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். தொடந்து தேனி மாவட்ட முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி. நகரம், ஒன்றிய, மற்றும் தொகுதி செயலாளர்களை நியமித்து கட்சியை பலப்படுத்தினார். இவரின் இச்செயல்பாடு தேனி மாவட்ட திராவிட கட்சிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டத்தில் தேவரின சமுதாய மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் எந்த நேரமாக இருந்தாலும் நேரடியாக வந்து தீர்த்து வைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு தேவரின இளைஞர்களின் வரவேற்பினை பெற்றார். அது மட்டுமில்லாமல் தேனி மாவட்ட பொதுமக்களின் வாழ்வதார ஆக்கபூர்வமான அடிப்படை பிரச்சினைகளை தனக்கே உரித்தான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியும் கண்டார். அதில் பொதுமக்களுக்குஅதிகம் பயன்படும் மருத்துவம், குடிநீர், திட்ட சாலைகள். விவசாயிகளின் பிரச்சனைகள். முல்லைப் பெரியார் பிரச்சனைகள் மற்றும் கேரளா தமிழர்களுக்கானஅதரவு போராட்டங்கள் ஆகிய பல்வேறு மக்கள் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி தனது அரசியல் பணிகளை மேற்கொண்டார்.
இவரின் வளர்ச்சியினை கண்டு சீரணிக்க முடியாத அதிகாரவர்கம் இவர் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தது. இவரை சிறையில் அடைத்ததினை அறிந்த 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு எதிர்ப்பினை காட்டியதன் விளைவாக பின்பு 7 நாட்களில் விடுதலை செய்யப்பட்டார். பின்பு இவர் மக்கள் நலப் போராட்டங்களுக்காக தேனி மாவட்டம் முழுவதும் அதிதீவிரமாக செயல்படத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களிடையே ஒரு இனக்கமான சமத்துவ சூழ்நிலை உருவாக காரணமாக இருந்தார். தேனி மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களின் ஆதரவு மேலும் மேலும் பெருகியது.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத அதிகாரவர்கம் தொடர்ந்து இவரின் கட்சி மாநில பொதுசெயலர் மூலமாக இவர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. இதை மீறி தனது மக்கள் நலபோராட்டங்களை தொடர்ந்ததின் விளைவாக இவர் சார்ந்த. கட்சியின் மாநில பொதுசெயலர், அதிகாரவர்கத்தின் அழுத்தத்தின் காரணமாக இவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியதாக அறிவித்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் தமிழ் மாநில தலைவர் PKM. முத்துராமலிங்கம், ஃபார்வர்டு ப்ளாக்கின் தமிழக பொதுசெயலர் தன்னிச்சையாக SR.தமிழனை நீக்கியது செல்லாது என அறிவித்தார். இந்த உட்கட்சி மோதல்களுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற மத்திய குழுவின் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டு SR தமிழன் நீக்கம் செல்லாது என மீண்டும் அறிவிக்கபட்டது.
கூட்டத்தினை வெற்றியுடன் முடித்துவிட்டு, தனது சட்டபடிப்பு தேர்வு எழுத பெங்களூரில் தங்கியிருந்த ‘மாவீரன்’ SR.தமிழன் 26.12.14 அன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.. அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் பொதுமக்கள் ஒருபுறம் கருதுகின்றனர்.
ஒரு மாவீரன், மக்கள் நலத் தொண்டன், முக்குலத்து காவலனின் மறையா புகழினை நாம் தலைவணங்கி போற்றுவோம்! மாவீரா! நீ மீண்டும் பிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
மீள முடியாத ஆழ்ந்த துயரத்தில், கனத்த இதயங்களுடன்... வீரவணக்கம்! வீரவணக்கம்!
நேதாஜி இளைஞர் சங்கம், பார்த்திபனூர்.
No comments:
Post a Comment